உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் ஆகஸ்ட் 15 இல் சர்வதேச சைவ மாநாடு

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
66 பார்வைகள்

தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஏற்பாட்டுக் குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது.

நீண்டகால யுத்தம், கட்டாய இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு காரணமாகச் சமூகத்தின் சமய விழுமியங்களும் வாழ்வியல் பெறுமதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் நோக்குடனும், தற்போதைய சமூகச் சூழலில் அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை, போதைப்பொருள் பாவனை, ஊழல் மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும், பல கோயில்கள் கட்டப்பட்டு வந்தாலும், சைவத்தின் அடிப்படைத் தத்துவங்களும் பண்பாட்டு விழுமியங்களும் இளைய தலைமுறையினரிடையே மங்கிவரும் நிலையைப் போக்கி, உண்மையான ஆன்மீக வாழ்வியலை வலுப்படுத்தி சமூக மறுமலர்ச்சியை உருவாக்கும் நோக்குடனும் இந்தச் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று குறிப்பிட்ட ஏற்பாட்டுக் குழுவினர், அறிஞர்கள், சமயப் பெரியோர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் தங்களது ஆலோசனைகளையும் ஆசிச் செய்திகளையும் வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேவேளை, மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் நல்லுள்ளங்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி இந்த முயற்சியில் பங்கெடுக்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0