உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்குத் தள்ளுபடி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
56 பார்வைகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பிரதேச சபையின் வீதியான பவானி வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் 59வது பிரிவின் கீழ் பிரதேச சபையினால் அறிவித்தல் ஒன்று செய்யப்பட்டது.

அந்த அறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கடந்த மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதே பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டனர்.

குறித்த இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள். ஒரு பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின் மூலமே கேள்விக்கு உட்படுத்துகின்ற முடியும். அதாவது வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும்.

பொலிசாரும் ஒரு அரச திணைகளத்தை சார்ந்தவர்கள். ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச திணைக்களத்துக்கு எதிராக 81வது பிரிவின்கீழ் நியதி சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில். அது தொடர்பான கட்டளைக்காக வழக்கானது தவணையிடப்பட்டது.

அந்த வகையில் அது தொடர்பான கட்டளையானது இன்றைய தினம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. அதாவது சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு தொடுநரான பலாலி பொலிசார் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து பிரதிவாதிகள் இதுவரையும் நீதிமன்றமானது வழக்கிலிருந்து விடுவித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0