பொறியில் சிக்கிய மிகப்பெரிய வனப்புலி.!
திம்புல – பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனி கிளிப் தேயிலை தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைப் பகுதியில், இன்று அதிகாலை 05:00 மணியளவில் கண்ட சுமார் 08 அடி நீளமுள்ள வனப்புலி (Panthera padus) ஒன்று, ஒரு புதர் நிறைந்த பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய நிலையில் காணப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்கள் நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய நிலையில் அந்தப் புலி பொறியிலிருந்து விடுவிக்கப்பட்டு ரந்தெனிகல கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று திம்புல-பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.