மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது
மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார்.
இன்று 16 ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் தலைமையில் மாதாந்த அமர்வு அச்சினிக்கா மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் காணி உரிமை அவசியம்.
குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் இன்று அனாதைகளாக நமது இலங்கை திருநாட்டில் உள்ளனர்.கடந்த 203 வருடமாக இலங்கையில் உள்ள காடுகளை அழித்து தேயிலை இறப்பர் தென்னை கோப்பி கொக்கோ போன்ற பயனுள்ள பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.
இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை அன்று முதல் இன்றுவரை ஜந்து தலைமுறையாக ஈட்டி தந்த வன்னம் உள்ளனர்.
இவ்வாறு உழைத்து வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு அவ்வப்போது ஆண்டு வந்த அரசாங்கங்கள் லயின் தொடர் குடியிருப்புகளில் வாழ்வதை கண்டு கொள்ளாமல் இருந்தது.நாட்டில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நில உரிமை இவர்களுக்கு இல்லை.
ஆகவே குறைந்த பட்சம் 20 பேச் காணியை தோட்ட குடியிருப்புகளில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் அதனை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றும் நாட்டின் தலைவரான அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த முன் மொழிவை இன்றைய அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஏற்றுகொணாடனர்.அத்துடன் ஆதரவு நல்கினர்.