உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
58 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார்.

இன்று 16 ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் தலைமையில் மாதாந்த அமர்வு அச்சினிக்கா மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் காணி உரிமை அவசியம்.

குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் இன்று அனாதைகளாக நமது இலங்கை திருநாட்டில் உள்ளனர்.கடந்த 203 வருடமாக இலங்கையில் உள்ள காடுகளை அழித்து தேயிலை இறப்பர் தென்னை கோப்பி கொக்கோ போன்ற பயனுள்ள பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.

இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை அன்று முதல் இன்றுவரை ஜந்து தலைமுறையாக ஈட்டி தந்த வன்னம் உள்ளனர்.

இவ்வாறு உழைத்து வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு அவ்வப்போது ஆண்டு வந்த அரசாங்கங்கள் லயின் தொடர் குடியிருப்புகளில் வாழ்வதை கண்டு கொள்ளாமல் இருந்தது.நாட்டில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நில உரிமை இவர்களுக்கு இல்லை.

ஆகவே குறைந்த பட்சம் 20 பேச் காணியை தோட்ட குடியிருப்புகளில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் அதனை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றும் நாட்டின் தலைவரான அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முன் மொழிவை இன்றைய அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஏற்றுகொணாடனர்.அத்துடன் ஆதரவு நல்கினர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீனவர்கள் சார்பில் முறைப்பாடு!

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித…

38 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் – 2026 எனும் நிகழ்வு அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆதரவு தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார்…

52 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் CResMPA திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய…

60 0 0