உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம்!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
63 பார்வைகள்

நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் ‘கார்போரியம்’ (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 (Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்த நாட்டின் வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளதாக…

45 0 0
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!

எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து,…

75 0 0
உலக செய்திகள்

ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான…

84 0 0
உலக செய்திகள்

ஈரானில் பிரித்தானிய நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிரேக் ஃபோர்மேன் ( Craig Foreman ) என்ற பிரிட்டிஷ் பிரஜைக்கு, மேலும் 2…

93 0 0