உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
40 பார்வைகள்

ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் – 2026 எனும் நிகழ்வு அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 03.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை விஞ்ஞான பிரிவுக்கான உதவி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அப்துல் வாஹித் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முகல்லம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் (றஹ்) மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில், முக்கிய நிகழ்வாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தராக இருந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றமைக்காக தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அக்கரைப்பற்று மஹ்ழரதுல் காதிரிய்யா பள்ளிவாசலின் தலைவரும் ஓய்வு நிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஏ.எம். நவாஸ், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. றாசித், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அனைவரும் கலந்து கொள்ளலாம் என
ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற ஏற்பாட்டுக் குழு திறந்த அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார். இன்று 16 ம் திகதி…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆதரவு தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் CResMPA திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய…

50 0 0
இலங்கை செய்திகள்

பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்தத் தீர்மானம்!

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

46 0 0