ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!
எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப், ஈரான் அமெரிக்காவுடன் ஒரு “இருத்தலியல் போரில்” (existential war) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஹோர்முஸ் நீரிணை மற்றும் கிரேட்டர் டுன்பு தீவு ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளது.
அத்துடன் ஈரானில் உள்ள ஒரு இராணுவ முகாமின் மீது நடந்த தாக்குதலில் 388-வது பிரிகேடைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கோதுமை சேமிப்பு நிலையம் ஒன்றும் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இதை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது.
இந்தநிலையில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான புதிய முடக்கத்தை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
2026 ஜூன் 17 அன்று மேற்கொள்ளப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம், தற்போதைய அமெரிக்கத் தாக்குதல்களால் செயலிழந்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானின் கடமைகள் செல்லாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போதைய நிலையில் வோஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில்,தான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.