உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
75 பார்வைகள்

எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப், ஈரான் அமெரிக்காவுடன் ஒரு “இருத்தலியல் போரில்” (existential war) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஹோர்முஸ் நீரிணை மற்றும் கிரேட்டர் டுன்பு தீவு ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளது.

அத்துடன் ஈரானில் உள்ள ஒரு இராணுவ முகாமின் மீது நடந்த தாக்குதலில் 388-வது பிரிகேடைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கோதுமை சேமிப்பு நிலையம் ஒன்றும் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இதை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது.

இந்தநிலையில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான புதிய முடக்கத்தை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.

2026 ஜூன் 17 அன்று மேற்கொள்ளப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம், தற்போதைய அமெரிக்கத் தாக்குதல்களால் செயலிழந்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானின் கடமைகள் செல்லாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைய நிலையில் வோஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

இதற்கிடையில்,தான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளதாக…

45 0 0
உலக செய்திகள்

நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம்!

நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூசிலாந்தின் மோட்டார்…

62 0 0
உலக செய்திகள்

ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான…

84 0 0
உலக செய்திகள்

ஈரானில் பிரித்தானிய நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிரேக் ஃபோர்மேன் ( Craig Foreman ) என்ற பிரிட்டிஷ் பிரஜைக்கு, மேலும் 2…

93 0 0