உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
89 பார்வைகள்

நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கான அங்கீகாரமும் தீர்மானங்களும், இன்று (15) நடைபெற்ற நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளன.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் ஒருங்கிணைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் பிரதேசத்தின் நீண்டகாலத் தேவைகளை உள்ளடக்கிய விரிவான திட்ட வரைபைச் சமர்ப்பித்தார்.

நிந்தவூர் மக்களின் நீண்டகால அபிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இத்திட்டங்கள் எவ்வித நிர்வாகத் தாமதமுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து அரச திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் தனது உரையின் போது வலியுறுத்தினார்.

நிந்தவூர் 05 ஆம் பிரிவில் 3ஆம் குறுக்குத் தெருவிலிருந்து கடற்கரை 2ஆம் வீதி வரையிலான குடியிருப்புகளில் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் நோக்கில், கிட்டங்கி வீதியூடாகப் புதிய வடிகால் அமைக்கப்பட்டு, அது நயீம் பள்ளிவாசல் வடிகாலுடன் இணைக்கப்படவுள்ளது.

அத்துடன், நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி முறையான வடிகால்களை அமைத்து, மண் நிரப்பி மைதானத்தை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வெட்டுவாய்க்கால் வீதியில் காரைதீவு – நிந்தவூர் உள் பாலத்திற்கு கிழக்கே காணப்படும் வீதி தாழ்வை நிரந்தரமாகச் சீரமைத்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இரு மொழிக் கல்வித் திட்டத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, நிந்தவூர் 09 ஆம் பிரிவில் புதிய முன்பள்ளி பாலர் பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கும், மினா, ஜேர்மன் மற்றும் அல்-சஹிதா பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி புதிய பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் விரிவாக ஆராயப்பட்டு, அவற்றை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குப் பரிந்துரைகளை அனுப்பி, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று பணிகளை விரைவுபடுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெவ்வை, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!

வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம்…

1 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

58 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

50 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

77 0 0