உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
98 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், முன்னைய காலங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்தப்பட்டு அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே குறித்த சில விவசாயிகளிடம் மாத்திரம் நெல் கொள்வனவு இடம்பெற்று வந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நெல் கொள்வனவையும் ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமன்றி நெல்லுக்கான உத்தரவாத விலையினையும் வழங்கி உள்ளதுடன் தனியார் ஒரு மூட்டை நெல்லினை 5500,620 ரூபாய்க்கும் தற்பொழுது இடைத்தரர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது. இருப்பினும் அரசாங்கம் கூறியவாறு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல் 8450 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகிறது.

குறித்த நெல் கொள்வனவு தொடர்ச்சியாக அனைத்து விவசாயிகளிடம் செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் உரிய நேரத்தில் நெல் கொள்வனவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

58 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

48 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

75 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

62 0 0