கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!
கிளிநொச்சி மாவட்டத்தின் டெங்கு நிலைமை, டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன், மாவட்ட தொற்றுநோய் பிரிவு வைத்தியர் ம.ஜெயராசா சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது. மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் அவர்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் குறைந்த அளவு காணப்பட்டிருந்த போதிலும் முன் எச்சரிக்கையாக சுற்றுச்சூழல் மற்றும் பொது இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் 13-ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் அனைத்திலும் வைத்தியசாலை, அரச சார்பற்ற திணைக்களங்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், பிரதான வீதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.



