உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

டெங்கு நோயினால் 45 பேர் உயிரிழப்பு.!

3 பார்வைகள்

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என்று அந்தப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாடு முழுவதும் உள்ள 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு பரவல் அதிகம் உள்ள அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மழையுடனான காலநிலை நிலவுவதால், கொசுக்கள் பெருகும் இடங்களைச் சுத்தப்படுத்துவது மிக அவசியமாகும்.

வீடு மற்றும் அலுவலகச் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதன் மூலம் மாத்திரமே இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

தொடர் காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவத்தைத் தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்குப் பரவல் அபாயத்தை உணர்ந்து, பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0