கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது.!
சட்டவிரோதமான முறையில் இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேகநபர்களும் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 46 மற்றும் 47 வயதுடைய தலவத்துகொட, மீதலாவ மற்றும் தொலஸ்பாகே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்ரோ வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் வைத்து இந்த கஜமுத்துக்களை விற்பனை செய்யத் தயாராக இருந்த போதே இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மூன்று சந்தேகநபர்களும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.