உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
2 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் நீதி அமைச்சர் ஏற்கனவே விரிவான விளக்கங்களை அளித்து, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாகப் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை எதிர்க்கட்சியினர் ஏதோ மகிழ்ச்சியுடன் பேசுவதைப் போல் உணர்கின்றேன். இத்தகைய உயிரிழப்புகளைக் கூட குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானதாகும்.” – என்றார்.

இதன்போது, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்வைத்த கருத்துகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.

“ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று உறுப்பினர் மரிக்கார் குறிப்பிடுகின்றார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2026 ஆம் ஆண்டளவில் இலங்கை பொருளாதாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியும் இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என அறிவித்துள்ளது. இவ்வாறான யதார்த்தங்களை மறைத்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.” – என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0