உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

கடந்த கால படுகொ*லைகளில் இருந்து வேறுபடுகின்றது நீர்கொழும்பு கலவரம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
2 பார்வைகள்

கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளைப் படுகொலை செய்வதற்காகவே அரசினால் திட்டமிட்டு, அதிகாரிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட வெலிக்கடை, பிந்துனுவேவா மற்றும் களுத்துறை சிறைக்கலவரங்களிலிருந்து, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் முற்றிலும் வேறுபட்டது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது உரையில் அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம், தற்போதைய அரசின் காவல் மற்றும் சிறைச்சாலை கட்டமைப்பின் தரநிலையை உலகுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இலங்கையின் சிறைச்சாலைகளில் இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளே அறைக் கதவுகளின் திறப்புகளைக் குற்றவாளிகளுக்குக் கையளித்தமை தப்பிப்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதேபோல், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாமில் 27 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அரசின் நேரடித் திட்டமிடலுடன் இடம்பெற்ற ஒன்றாகும்.

இத்தகைய கடந்தகாலச் சம்பவங்கள் அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புத் தாக்குதல்களாகவே கருதப்படுகின்றன. ஆனால், அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக்கலவரம் அத்தகைய திட்டமிட்ட படுகொலைகளிலிருந்து வேறுபடுகின்றது. இது தற்போதுள்ள அரச கட்டமைப்பின் மனிதநேயமற்ற மற்றும் வினைத்திறனற்ற காவல் நிர்வாகத்தையே உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

வெலிக்கடை, பிந்துனுவேவா மற்றும் களுத்துறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அன்று இழைக்கப்பட்ட அநீதி போன்றல்லாது, நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காவது உரிய நீதி கிடைக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0