உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
2 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பகுதி நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டது.

இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையே கைவிடப்பட்ட நிலையிலிருந்த காணியில் காடுகளும் பெருமளவான பொலித்தீன் குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதாரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் நுளம்பு தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

இது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் பத்மநாதன் முருகதாஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து இந்த துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.

புளியந்தீவு பகுதியில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துச் செல்லும் டெங்கின் தாக்கத்தினை குறைப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் ஏனைய திணைக்களங்கள், பாதுகாப்பு துறைகளும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

12 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

15 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

15 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

11 0 0