உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிர்நீத்த ஏழு அதிகாரிகளுக்கும் நீதி அமைச்சர் கண்ணீர் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
2 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன ஆகியோர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த ஏழு அதிகாரிகளின் பூதவுடல்கள், இன்று காலை ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் மற்றும் அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரில் சென்ற அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இதன்போது, நாட்டுக்காகத் தமது கடமையின் போது உயிர்நீத்த அதிகாரிகளின் தியாகத்தைக் கண்டு அமைச்சர் மனமுருகி விம்மி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, ஏழு அதிகாரிகளின் பூதவுடல்களும் இறுதிக்கிரியைகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

15 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

22 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

18 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

19 1 0