உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

இளைஞர்களின் கதிர்காம பாதயாத்திரை பச்சிலைப்பள்ளியை சென்றடைந்தது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
3 பார்வைகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இன்று அதிகாலை கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் ஆன்மீகப் பாதயாத்திரை பச்சிலைப்பள்ளி பகுதியை சென்றடைந்தது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஐந்து இளைஞர்களுடன் இந்த ஆன்மீகப் பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமமானது.

காலை 11:00 மணியளவில் பச்சிலைப்பள்ளி, இரட்டைக் கேணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பச்சிலைப்பள்ளி பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து இளைஞர்கள் இந்த யாத்திரையில் தங்களை இணைத்துக் கொண்டு, கதிர்காமம் நோக்கிய தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முக்கிய அதிகாரிகள், பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு யாத்திரிகர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0