போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
வத்தளை, எந்தேரமுல்ல பகுதியில் மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, எந்தேரமுல்ல சன்பிளவர் கார்டன்ஸ் பகுதியில் விசேட அதிரடிப்படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2.325 கிலோகிராம் ஹெரோயின் கையிருப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்போடு தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக எந்தேரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.