உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

எதிரணிகளை ஒன்றிணைக்க நாமல், ரோஹித புதிய வியூகம்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
2 பார்வைகள்

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒன்றிணைக்கும் நோக்கில், “ஏ ரீம் – நெக்ஸ்ட் வேவ்” (A Team – Next Wave) என்ற பெயரிலான புதிய அரசியல் தளம் ஒன்றை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுராத ஜயரத்ன, டி. வி. சானக மற்றும் சானக மதுகொட ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அரசு கொண்டுள்ள பெரும்பான்மை பலம் காரணமாக, அங்கு தங்களது கருத்துக்களைச் சரியாகப் பிரதிபலிக்க முடியாத அரசியல் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்குக் குரல் கொடுப்பதே இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
“நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத அரசியல் குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, தேசிய பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் குரல் எழுப்ப இந்த முன்முயற்சி செயற்படும். அத்துடன், பரந்தளவிலான ஓர் அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் பிரதிநிதிகளை இந்த ஒரே மேடையில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிகள், வரிச்சுமை மற்றும் விவசாயிகள், மீனவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அனுபவமிக்க ஓர் அரசியல் குழு நாட்டுக்கு அவசியமாகவுள்ளது.

இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை மாற்றியமைக்கும் நோக்கில், அனைத்து எதிர்க்கட்சி சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுப் படையைக் கட்டியெழுப்பி, அதனை நாட்டின் அடுத்த தேசியக் குழுவாக மாற்றுவதே இந்தத் தளத்தின் நீண்டகால இலக்காகும்.” – என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

15 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

22 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

18 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

19 1 0