உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

சிறை மோதலில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட சுகாதார அமைச்சர்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
4 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் 72 மற்றும் 79 ஆம் இலக்க விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுக்குச் சென்ற அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கான தற்போதைய சிகிச்சைகள், அவசர தேவைகள் மற்றும் இதர ஆதரவு சேவைகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டார்.

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 29 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பதுடன், ஏனைய 14 பேர் கைதிகள் ஆவர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0