உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

பாதாள உலகக் குழுக்களோடு எப்போதும் ராஜபக்ஷக்களுக்குத் தொடர்பு உண்டு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
3 பார்வைகள்

“சிறைச்சாலைகளில் போதுமான வசதிகள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சொந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு புலம்புவது நியாயமானதே” என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் காரசாரமாகத் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் என்று குறிப்பிடும் போது, ஏதாவது ஒரு வழியில் ராஜபக்ஷக்கள் அவர்களுடன் தொடர்புப்பட்டிருப்பதே உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது,
“தற்போது நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிராக அரசால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள், அரசின் இந்த வேலைத்திட்டங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்குப் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எனினும், அவர்களின் அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தடுப்பதற்கு நீதி அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்துகின்றார். ஆனால், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு நீதி அமைச்சர் தெளிவான விவரங்களை வழங்கியுள்ளார். இதில் எதனையும் மறைக்க வேண்டிய தேவை தற்போதைய அரசுக்கு இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தங்காலை சிறைச்சாலையில் பாரிய கலவரம் ஒன்று ஏற்பட்டது. அப்போது கலவரத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஜூலம்பிட்டியே அமரே’ என்பவரைப் பார்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு சென்று, ‘அமரே நான் வந்துவிட்டேன், கலவரத்தை நிறுத்து’ என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார். உடனடியாக அந்தப் பாதாள உலகக் குழு உறுப்பினர் கலவரத்தை நிறுத்தினார். இதுதான் இவர்களது பின்னணி.

ஆனால், தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைக்குச் சென்று, மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று எவரையும் பெயர் குறிப்பிட்டு எந்தவொரு பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அழைக்கவில்லை. நாட்டின் தற்போதைய சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முறையான மற்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0