உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது அதிகாரிகள் சித்திரவதை.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
1 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளைச் சிறை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் குழுவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், அங்குள்ள சிறை அதிகாரிகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்படுவதோடு, பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்று எமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தடுப்புக்காவலில் உள்ள கைதிகளுக்கு எதிராக இவ்வாறான வன்முறைகளைப் பிரயோகிப்பது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை முற்றாக மீறும் செயலாகும். எனவே, இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்களைச் சிறைச்சாலை அதிகாரிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என எமது குழு பலத்த அதிருப்தியை வெளியிடுவதுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.” – என்றுள்ளது.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளைக் கையாளும் போது சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளைப் பின்பற்றி நடக்குமாறும் பொறுப்பு வாய்ந்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு இந்த அறிக்கையின் ஊடாக அவசர அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பு நிமித்தம் சுமார் 734 கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு அவசரமாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0