உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

நாமலுக்கு எதிரான கிரிஷ் ஒப்பந்த வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
1 பார்வைகள்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும் முறையான சட்ட நடைமுறையின் கீழ், இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படும் இரண்டு இந்திய தேசிய சாட்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் அழைப்பாணைகளை அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த காலத்தில் கொழும்பு கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த கிரிஷ் கட்டடத் தொகுதி ஒப்பந்தத்தின் போது, முறைகேடான நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கை நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சிகளை முன்னிலையாகுமாறும் கட்டளையிட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0