உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
1 பார்வைகள்

மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க பக்தர்களின் நலன் கருதி திறந்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தையும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாக பள்ளங்கண்டல் ஆலயத்தின் மத நிகழ்வுகள் மற்றும் திரு விழாக்களில் பங்கேற்று வருவதாக ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது மன்னார் – பூக்குளம் வழியாக பள்ளங்கண்டல் ஆலயத்தை சென்றடையும் முக்கிய பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொண்டச்சி, முள்ளிக்குளம் உள்ளிட்ட ஆலயத்தை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது மதக் கடமைகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு இந்தப் பாதை மிக முக்கியமானதாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாதை மூடப்பட்டுள்ளதால் வயோதிபர்கள், பெண்கள் மற்றும் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமது பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை கருத்தில் கொண்டு பக்தர்களின் நலன் மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பாதையை மீளத் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல தசாப்தங்களாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கி வரும் பள்ளங்கண்டல் ஆலயத்தை நோக்கிச் செல்லும் இந்தப் பாதை மீண்டும் திறக்கப்படுவது, அப்பகுதி மக்களின் மத சுதந்திரத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் எனவும் ரிஷாத் பதியுதீன் தனது வேண்டுகோளில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பக்தர்களின் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவதோடு, பிராந்திய மக்களின் மத மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தடையில்லா அணுகலை வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0