உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

ஊழல்வாதிகள் தப்ப முடியாது; அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
1 பார்வைகள்

“நாட்டில் ஊழல் மற்றும் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடவே முடியாது. தவறிழைத்தவர்கள் யார் என்ற பேதமின்றி அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” – என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தராசு பார்க்காமல் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுப்பது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் முதன்மைப் பொறுப்பாகும். இதனைச் சிலர் ‘அரசியல் பழிவாங்கல்’ எனப் பூசி மெழுகப் பார்க்கின்றனர். ஆனால், இதுவொருபோதும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. மாறாக, ஊழலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எமக்கு வழங்கியுள்ள வரலாற்று ஆணைக்கு மதிப்பளித்து, அதனை நடைமுறைப்படுத்தும் தூய்மையான செயற்பாடாகும். எனவே, யார் எந்தவொரு உயர் பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே.

ஏற்கனவே ஊழல் புரிந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய நிலை உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராகப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் எதிரான விசாரணைகள் தற்போதைய சூழலில் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலர் எள்ளிநகையாடும் தொனியில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அனைவரும் கைது செய்யப்பட்டால் நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாமல் போய்விடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதற்காக சட்டத்தை அமுல்படுத்தும் தார்மீகப் பொறுப்பை அரசாங்கத்தினால் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் நாட்டின் பொதுச் சொத்துக்களைச் சூறையாடியதற்குச் சட்டத்தின் முன் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கூட அண்மைய நாட்களாக நீதிமன்றங்களுக்கும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் அலைந்து திரிவதை நாடு பார்க்கின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான பல்வேறு தரப்பினருக்கு எதிரான அதிரடி விசாரணைகள் தொடரும். எந்தவொரு விசேட நபருக்கும் எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது. நீதித்துறை அமைப்புகள் தற்போது முழுமையாகச் சுயாதீனமாகச் செயற்படுகின்றன. அதற்கேற்பவே அனைத்து சட்ட நடவடிக்கைகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும்.

நாட்டில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருந்த ஊழல் அரசியல் கலாச்சாரத்தை வேரோடு மாற்றி, தூய்மையான சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் இறுதி நோக்கமாகும். ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான எமது இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகள் எவ்விதத் தொய்வுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0