உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
12 ஞாயிறு

உணவகங்களில் அதிரடிச் சோதனை; மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
2 பார்வைகள்

கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி. சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி. சரப்டீன் அவர்களின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை (20) இரவு முதல் தொடர்ச்சியாக கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இதேவேளை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 03 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு தயாரிப்பு முறைகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் தூய்மை பேணுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்க்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பொதுஜன பெரமுன அழைப்பு

நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது. இது…

17 0 0
இலங்கை செய்திகள்

பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் உலக தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் விழிப்புணர்வு நிகழ்வு!

பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் உலக தினத்தை முன்னிட்டு, பலாந்தோட்டை அபினி ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு…

12 0 0
இலங்கை செய்திகள்

களுத்துறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு!

களுத்துறை மாவட்டம், மத்துகம, நாபொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று சனிக்கிழமை பிற்பகல் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல்…

12 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள் நியமனம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க…

19 0 0