பண்டிகையை முன்னிட்டு 600 அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைக்க நடவடிக்கை.!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளை குறைத்து, அவற்றை சத்தோசா விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் இணைந்து, சந்தையில்அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.இவ்வாய்வுகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.