தேசிய சமாதான பேரவையினால் நடைபெற்ற நடமாடும் சேவை.!
கினிகத்தேன அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இன்று 26 ஆம் திகதி காலை 9 மணிக்கு அம்பகமு பிரதேச செயலாளர் தலைமையில் நுவரெலியா மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் அமைப்பாளர் திருமதி இரேஷா உதேனி அவர்களின் வழிகாட்டலில் அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கான தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, திருமண பதிவுச் சான்றிதழ், காணி உரிமைப்பத்திரம், மரண சான்றிதழ் போன்றவற்றுக்கான நடமாடும் சேவை ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.