உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் நேற்று (25) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் குப்பைகளை உண்பதற்காக நடமாடி திரிந்த நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

12 வயதுடைய குறித்த பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்புப் பொறுப்பாளரான அஜித் குணரத்ன உள்ளிட்ட குழுவினர் சென்று ஆய்வு செய்தனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானையின் உடலை மீட்டுள்ளதுடன் யானை உயிரிழந்தமைக்கான காரணம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த யானை மீதான பிரேத பரிசோதனை தொடர்பில் அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று (26) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையில் யானை இறப்பிற்கான காரணம் கண்டறியப்பட உள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் காரைதீவு பொலிஸாரும் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

38 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

35 0 0