மஸ்கெலியாவில் ஆயுர்வேத மருந்தகத்தில் 851 கஞ்சா சுருள்கள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர் கைது.!
மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர்வேத மருந்தகத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு இணங்க பொலிஸ் சார்ஜன்ட் ருக்மல் மற்றும் கான்ஸ்டபிள் நவ்ஷாட் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா கலவையுடைய ஆயுர்வேத மருந்தக 851 சுருள்கள் கைப்பற்றப்பட்டு, மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இன்று மாலை 8.00 மணியளவில் நிகழ்ந்தது. கைதானவர் சிறையில் அடைக்கப்பட்டு, நாளை (26) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கைதானவர் எம்பிளிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த ஆயுர்வேத மருந்தகத்தை மஸ்கெலியா பேருந்து நிலைய அருகே புதிதாக திறந்துகடந்த வாரம் ஹட்டன் ஊழல் தடுப்பு மற்றும் ஹட்டன் தலைமை காவல் துறையினரின் கீழ் மதன மோதகையுடன் பிடி செய்யப்பட்டார்.இது ஒரே வாரத்தில் இரண்டாவது தடவை, மஸ்கெலியா பொலிஸ் நடத்திய சுற்றிவளைப்பின் போது, கைதான சம்பவமாகும்.