நாட்டில் நிலவும் வறட்சிக்காக நீர் சேமிப்பு அவசியம் – தேசிய நீர் சபை எச்சரிக்கை.!
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தண்ணீர் விநியோகத்தில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற முறையில் வீணாக்கக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் பொறியாளர் சந்தன பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.