உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மலையக அரசியல் அரங்கம் – மலையக ஊழியர் சங்கம் கூட்டிணைவு அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மலையக அரசியல் அரங்கம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதனுடன் அரசியல் ரீதியாக கூட்டிணைந்து செயற்பட மலையக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக இரு தரப்பும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் 22 ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்ற மலையக அரசியல் அரங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைப்பின் செயலாளர் நாயகம் மயில்வாகனம் திலகராஜா மற்றும் மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


இந்த புரிந்துணர்வின் அடிப்படையில், மலையக அரசியல் அரங்கத்தின் தலைவி அருளப்பன் இதயஜோதி முன்னிலையில், மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்கண்மணி சிவனேசனுக்கு ஊவா மாகாண அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சங்கத்தின் தலைவர் என். விஸ்வநாதன், அமைப்பாளர்கள் எஸ். ராஜாராம், எஸ். தியாகராஜா மற்றும் செயற்பாட்டாளர் அ. சுந்தரேசன் ஆகியோருக்கு அரங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


எதிர்வரும் காலங்களில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாக இணைந்து செயற்பட இரு அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இந்த கூட்டிணைவு மலையகம் முழுவதும் விரிவடையும் அரசியல் கூட்டணிக்கான அடித்தளமாக அமையும் எனவும் மயில்வாகனம் திலகராஜா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

35 0 0