வவுனியா வடக்கில் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு..!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவுதினம் இன்று (25.03.2026) அனுசரிக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தர்மலிங்கம் தனுசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ப. சத்தியலிங்கம், பிரதேசசபை உறுப்பினர்கள் சுசீலன், சரோஜாதேவி உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்வின் போது நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னை பூபதியின் சேவைகள் நினைவுகூறப்பட்டது.
