உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் – பொதுஜன பெரமுன எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களால் ஏற்பட்ட நட்டத்தை மக்களிடம் சுமத்த அனுமதிக்க முடியாது என்றும், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்திருந்தபோதிலும், இலங்கையில் எரிபொருள் விலை முன்கூட்டியே உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

போர்ச் சூழலை காரணம் காட்டி 20 நாட்கள் வரை விலை மனு கோரப்படாததால், தனியார் நிறுவனங்களை விட ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 80 ரூபா அதிகமாக அரசு செலுத்தியுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலாபம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழலால் 150 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த இழப்பை ஈடுகட்ட நாட்டிலுள்ள சுமார் 60 இலட்சம் வீடுகளில் தலா மூன்று மின்விளக்குகள் வீதம் மொத்தம் 1.8 கோடி விளக்குகளை ஒரு நாள் முழுவதும் அணைக்க வேண்டிய நிலை உருவாகும் என சுட்டிக்காட்டினார்.


இவ்வாறான ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை மக்களிடம் சுமத்தாமல், அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்தே அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முயற்சி எடுக்கப்பட்டால், அதற்கு எதிராக பாரிய மக்கள்போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் எனவும் டி.வி. சானக்க தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

34 0 0