கொழும்பில் கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு.!
கொழும்பு, நவகமுவ – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதா அல்லது அதிக வேகமா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.