இலங்கை மின்சார சபையில் அதிரடி மாற்றம்.!
இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய, இலங்கை மின்சார சபையினால் (CEB) இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த மின் விநியோகப் பணிகள் இனி எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (EDL) நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதும், அதன் வினைத்திறனை அதிகரிப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.
மின் விநியோகத் துறையில் பின்வரும் முக்கிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த EDL நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது:மின் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்தல்.,தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்தல்,நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல்.இந்த நிறுவனத்தின் முக்கிய இலக்கு என தெரிவிக்கப்டுகிறது
இந்தச் சீர்திருத்தத்தின் மூலம் பொதுமக்கள் தமக்குத் தேவையான மின்சார சேவைகளை விரைவாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட (Customer-Centric) ஒரு சேவை கலாசாரத்தை உருவாக்குவதன் மூலம், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க EDL நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சக்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் சிறந்த சேவைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.