குடகஹபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு.!
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடகஹபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது இரு சக்கர வாகனத்தில் குடகஹபிட்டிய சந்தி வழியாகப் பயணித்துக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த மிக்சர் வகை பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.இதனால் கடுமையாகக் காயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் முன்னரே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.