உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மின்சார சபை மறுசீரமைப்பு: அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைப் பெற்ற தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையைச் சிதைக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை முன்னிறுத்தி, எந்த நிலையிலும் மின்சார சபையை தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் அந்த வாக்குறுதியை மறந்து, மின்சார சபையை பல பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


மின்சக்தித் துறை நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய துறையாக இருப்பதால், அதனுடன் தொடர்புடைய எந்த மறுசீரமைப்பும் பொறுப்புடனும்வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிகாரத்தைப் பெற்ற ஆட்சியாளர்கள் தங்களை நம்பி வாக்களித்த 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


மின்சார சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் எவ்வித முரண்பாடும் இல்லையெனவும், ஆனால் அந்தச் சீர்திருத்தங்கள் நிறுவனத்தையே பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பிலும் அரசின் திட்டமிடல் குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டி, இப்போது முழு மின்சார சபையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல்அரசின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் நாட்டின் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

56 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0