மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு.!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபாய் புலமைப்பரிசில் கொடுப்பனவு நாளை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
மஹபொல நம்பிக்கை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் மூலம் திறைசேரி கூட்டாக இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கு நிதியளிக்கிறது.தற்போதைய ஏற்பாடுகளின்படி, 48 வீதம் மஹபொல நம்பிக்கை நிதியத்தாலும், 52 வீதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறது.