ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்.!
மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து, பயணிகளின் பாதுகாப்பும் நலனும் முன்னுரிமையாகக் கருதி, ரியாத் மற்றும் துபாய்க்கான தமது அன்றாட வானூர்தி சேவைகளை மீள ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று இரவு ரியாத்திற்கான சேவையும், நாளை முதல் துபாய்க்கான சேவையும் மீண்டும் இடம்பெறவுள்ளன.
கொழும்பு – ரியாத் சேவை மாலை 6.15 மணிக்கும், ரியாத் – கொழும்பு சேவை இரவு 10.35 மணிக்கும் இயக்கப்படும்.
அதேபோல் கொழும்பு – துபாய் சேவை நண்பகல் 12.40 மணிக்கும், துபாய் – கொழும்பு சேவை மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படவுள்ளது.
மேலும், பயணிகள் மேலதிக தகவல்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்ள, ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.