உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்; மைத்திரி, ரணில் உட்பட 12 பேருக்கு எதிராக உடனடி விசாரணை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் ஆகியோரின் கையொப்பத்துடன் இதற்கான விசேட கடிதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆழமாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணைப் வளையத்துக்குள் வரும் முக்கியஸ்தர்கள்:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கடமை தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளவர்களில் முக்கியமானவர்கள்:

அரசியல் தலைவர்கள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பாதுகாப்பு உயர் அதிகாரிகள்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர.

பொலிஸ் அதிகாரிகள்: சிசிர மெண்டிஸ், நிலந்த ஜெயவர்தன, நந்தன முனசிங்க, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னக்கோன், வசந்த விக்கிரமசிங்க, பி.எல். பெரேரா மற்றும் ஏ.எஸ். லத்தீப்.

குறித்த கடிதத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்ற அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறியமை மற்றும் கடமை உதாசீனம் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

64 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0