பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கல்.!
மாதகல் பகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற, தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களின் 75 பிறந்தநாளையொட்டி இந்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலருணவுப் பொதிகள் மாதகல் – பரிமளகந்தி படிப்பகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.



