உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஒரே நாளில் இருவர் யானைகள் தாக்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையின் பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வேறு காட்டு யானை தாக்குதல் சம்பவங்களில் இளம் விவசாயி ஒருவரும், முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்தந்த பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் வயல் வேலைகளை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 25 வயதுடைய இளம் விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெதிரிகிரிய தெற்கு பகுதியைச் சேர்ந்த அவரது மரணம் அப்பகுதி விவசாய சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேவேளை, அம்பாறை பானம பகுதியில் ஏரியில் நீராடச் சென்ற 71 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நீராடி விட்டு வீடு திரும்பும் போது புதருக்குள் மறைந்திருந்த யானை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.யானை–மனித மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

54 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

73 0 0