சுதந்திர தினத்தை முன்னிட்டு பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்கள்.!
சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசிய கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகர சபை மைதானத்தில் இன்று (04.02) இந் நிகழ்வு இடம்பெற்றது.
மூவின மாணவர்கள், இளைஞர், யுவதிகள் ஊர்வலமாக மாநகர சபை மைதானத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மூவின மாணவர்களும் இணைந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அதனை தொடர்ந்து சாமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன. அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட மூவின மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், மதகுருமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




