உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

300வது படத்தை எட்டிய யோகி பாபு!

சினிமா 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தமிழ் சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுத்த யோகி பாபு, சமீபகாலமாக கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு காமெடியன்களாக நடித்து வந்த சந்தானம், சூரி போன்றவர்கள் முழுநேர ஹீரோவாகிவிட்டதால் இப்போது யோகி பாபு மட்டுமே பிரதான காமெடியனாக இருந்து வருகிறார்.

தற்போது 300 வது படம் என்ற இலக்கை அடைந்திருக்கிறார் யோகி பாபு. அவர் நடிக்கும் 300 வது படத்திற்கு அர்ஜுனன் பேர் பத்து என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதை ராஜ் மோகன் என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், தலைவன் தலைவி படத்துக்கு பிறகு, தற்போது கருப்பு, ஜெயிலர்-2, தி ராஜா சாப், அட்லீ -அல்லு அர்ஜூன் படங்களை தொடர்ந்து ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தில் அடுத்து கதையின் நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. ‛‛இது எனது 300வது படம், இத்தனை படங்களுக்கு எனது ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் படங்கள் பண்ணனும். உங்களின் ஆதரவு தேவை” என்கிறார் யோகிபாபு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0