உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

யாழில் அடித்தே கொ@லை செய்யப்பட்ட வயோதிபப் பெண் – மகன் கைது!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
19 பார்வைகள்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்றையதினம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி (வயது 74) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக இருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சடலத்தில் அடி காயங்கள் இருப்பதனையும், வீட்டில் பொருட்கள் வீசப்பட்டு இருப்பதனையும் அவதானித்தார்.

அதன்பின்னர் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சென்று இடத்தினை பார்வையிட்டார்.

சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதால் சடலத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் மூலம் அது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டது.

குறித்த பெண்ணும் அவரது மகனுமே வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மகனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல இலட்சம் ரூபா பணத்தினை வீதியில் வீசியதுடன், பல இலட்சம் ரூபா பணத்தினை சேதப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சுப மங்கள மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள…

24 0 0
இலங்கை செய்திகள்

நீண்ட நாட்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் போ@தைப் பொருளுடன் கைது!

நீண்ட காலமாகப் பொலிஸாரை ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்ற போது சம்மாந்துறை பொலிஸாரினால்…

18 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சவூதி நாட்டின் சிறையில் வாடும் இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

7 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்.!

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண…

26 0 0