ஈரானின் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்குப் பயணம்!
“ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்னாஸ் அரக்ச்சி ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்காக பெய்ஜிங் (Beijing) செல்லவுள்ளார்.
பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கவும், அமெரிக்கா-ஈரான் இடையிலான முட்டுக்கட்டையை உடைக்கவும் சீனா, சமரசத் தூதராகப் செயல்பட முடியுமா என்பது குறித்து இந்த பயணத்தின் போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிராந்திய பாதுகாப்பை வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி பிராந்திய நாடுகளே கையாள வேண்டும் என்பதை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியிலும் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கும் முதன்மை நாடாகவும், மத்திய கிழக்கில் முக்கிய ராஜதந்திர சக்தி வாய்ந்த நாடாகவும் சீனா திகழ்கிறது.”