ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!
மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
மித்தெனிய பொலிஸாரிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 612 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.