மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய “கொப்பரா” மீன்.!
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ் கடல் மீன் சிக்கியுள்ளது.
சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ் கடலில் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. வேகமாக நீந்தக்கூடிய நீளமான மூக்குடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.



