நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!
கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
மினுவங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரை ஒன்றில் தங்கியிருந்த குறித்த சிறுவன், உடுதும்பரையில் இடம்பெற்ற தான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஏனைய பௌத்த பிக்குகளுடன் அங்கு சென்றுள்ளார்.
தான நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட சிலர் ஹீன் கங்கையில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, 11 வயதான பௌத்த பிக்கு நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.